சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் மறைந்த இயக்குனர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடந்தது. இந்த சிலையை ரஜினிகாந்த், கமல் இருவரும் திறந்து வைத்தனர்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் நடிகர் கமல். இவரது சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனம் வாயிலாக பல படங்களை தயாரித்துள்ளனர்.
தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வேன் என்று கூறியபடி செயல்பட்டு வருகிறார் நடிகர் கமல். இவரது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாயிலாக ராஜபார்வை, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், ஹேராம், விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டன.
மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிட்டத்தக்கது. இந்நிறுவனத்தின் புதிய அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது.